Sunday, August 28, 2016

பப்பாளி சாகுபடி. Papayya cultivation.

http://www.vikatan.com/pasumaivikatan/2016-sep-10/yield/122681-yazhpanam-drumstick-will-give-374-lakh-profit.art

இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....

பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.
ஏக்கருக்கு அரை கிலோ விதை!

பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும்.

15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!

பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!

6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும்.

பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது.

7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.
 மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்!
பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.
தொடர்புக்கு,
மரியராஜ்,
செல்போன்: 89402 56706.

The machine i made to remove groundnut pods from plant.

Only pics now i will do a write up later .













Thursday, August 18, 2016

Ladies finger cultivation . நாட்டு வெண்டைசாகுபடி .

http://www.vikatan.com/pasumaivikatan/2016-jun-10/yield/119500-earning-from-ladies-finger.art

*அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
*ஆண்டு முழுவதும் பயிரிடலாம்...

*ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்தால், அதிக விலை.

*நாட்டு வெண்டை 120 நாள் மகசூல் கொடுக்கும்.

*சராசரி 6 ஆயிரம் கிலோ மகசூல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்தழகன்.
முத்தழகன்,
செல்போன்: 76395-08971

அரை ஏக்கர் இயற்கை முறை நாட்டுரக வெண்டி சாகுபடி மூலமாக 160 நாள்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபமாக மிஞ்சுது. 160 நாளுக்கு பிறகும் கூட செடிகள் உயிர்ப்போடு இருக்கு. செடியை கவாத்து பண்ணி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் கொடுத்தோம்னா, அடுத்த
80 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

அரை ஏக்கர் நிலத்தில் நாட்டு வெண்டையை சாகுபடி செய்யும் விதம் குறித்து முத்தழகன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 3 அடி இடைவெளியில் வரிசை வரிசையாக வாய்க்கால் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நிலத்தை ஈரப்படுத்தி, வாய்க்கால் உள்கரைகளில் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு ஒரு குச்சியால் ஓர் அங்குல ஆழத்துக்கு குழி பறிக்க வேண்டும். 100 கிராம் ஆட்டு எருவை மண்ணோடு கலந்து குழியில் போட்டு, தலா 2 விதைகள் போட வேண்டும். அரை ஏக்கரில் விதைப்பு செய்ய ஒன்றரை கிலோ நாட்டு வெண்டை தேவைப்படும். 3-ம் நாள் முளைப்புக்கு வரும். 7-ம் நாள் இலைகள் உருவாகும். 10-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 13-ம் நாள் களை எடுக்க வேண்டும். 20-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் வெண்டை வரிசைகளுக்கு இடையே 2 அடி அகலம், முக்கால் அடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து, அந்த மண்ணைக் கொண்டு வெண்டைச் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.

30-ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, வடிகட்டி, தெளிப்பான் மூலம் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால், அடுத்த ஒரு வாரத்தில் செடி நன்கு ஊட்டமாக, செழிப்பாக வளரத் தொடங்கும். பூக்களும் அதிகமாக உருவாகும். 20 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். இதனால் இலைப்பேன் தாக்குதல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம். 40-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். காய்ப்புழுத் தாக்குதல் வராமல் தடுக்க, 42-ம் நாள் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை, வேப்பிலை மூலம், செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால் சப்பாத்திப் பூச்சிகள் வராமல் முழுமையாக தடுக்க முடியும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். வெண்டைச் சாகுபடியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் என்பது பெரும் சவாலானது. செடிகள் சுணங்கி கிறங்கி விடும். இலைகள் சுருங்கிவிடும். எவ்வளவுதான் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அடித்தாலும், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

மூலிகைப் பூச்சிவிரட்டி!

தலா 5 கிலோ புங்கன், வேம்பு, ஆடாதொடை, நொச்சி, எருக்கன் இலை மற்றும் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு வடிகட்டி, அந்தக் கரைசலோடு, தலா 100 மில்லி புங்கன் மற்றும் வேப்பெண்ணெய், 100 கிராம் காதி சோப்பு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு  300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசல்!

ஒரு கிலோ பச்சைமிளகாய், அரை கிலோ இஞ்சி, கால் கிலோ பூண்டு, 100 கிராம் புகையிலை கலந்து மிக்ஸியில் அரைத்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.

2 லிட்டர் அளவுக்கு கரைசல் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பு கலந்து ஊறவைத்து, தலா 50 மில்லி புங்கன், இலுப்பை மற்றும் வேப்பெண்ணெயைக் கலந்து நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு பாத்திரங்களில் உள்ள கரைசல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வடிகட்டினால், தெளிந்த கரைசல் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்

Monday, August 15, 2016

பாசிப்பயறு உளுந்து இயற்கை முறையில மானாவாரி விவசாயம்

http://www.vikatan.com/pasumaivikatan/2016-aug-25/yield/122140-acre90-days129-lakh-profit-from-greengram.art

“மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்குது. கரிசல் கலந்த மணல்பாங்கான நிலம். மானாவாரி விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருக்கேன். வருஷா வருஷம் சித்திரையில கோடை உழவு போட்டு வெச்சுடுவேன். ஆடிப்பட்டத்துல ரெண்டு ரெண்டு ஏக்கரா பிரிச்சு பாசிப்பயறையும், உளுந்தையும் சாகுபடி செஞ்சிடுவேன். அடுத்து மழையைப் பொறுத்து புரட்டாசி, ஐப்பசி பட்டங்கள்ல கம்பு, கேழ்வரகு, சிவப்புச்சோளம், குதிரைவாலினு பயிர் பண்ணுவேன். வருஷம் தவறாம செம்மறி ஆட்டுக்கிடை போடுறதால அடியுரம் கிடைச்சுடுது. ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா மட்டும்தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன். மானாவாரியில இயற்கை முறை விவசாயம்கிறதால பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வர்றதில்லை.  அப்படியே வந்தாலும் பஞ்சகவ்யா தெளிக்கிறதிலேயே அதெல்லாம் கட்டுப்பட்டுடுது. இருந்தாலும், வருமுன் காக்கும்கிறதுக்காக வேப்பெண்ணெய்க் கரைசலை மட்டும் தெளிச்சிடுவேன்.


“போன போக சாகுபடியில் ரெண்டு ஏக்கர் நிலத்துல 806 கிலோ பாசிப்பயறு கிடைச்சது. உளுந்து, ரெண்டு ஏக்கர் நிலத்துல 916 கிலோ கிடைச்சது. பாசிப்பயறுக்கு கிலோ 98 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 113 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. உளுந்து கிலோ 90 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 105 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. அந்த வகையில் 806 கிலோ பாசிப்பயறு மூலமா 91 ஆயிரத்து 78 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 28 ஆயிரத்து 600 ரூபாய் செலவு போக, 62 ஆயிரத்து 478 ரூபாய் லாபமா நின்னது.  916 கிலோ உளுந்து மூலமா 96 ஆயிரத்து 180 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 29 ஆயிரத்து 400 ரூபாய் செலவு போக 66 ஆயிரத்து 780 ரூபாய் லாபமா நின்னது. மொத்தமா நாலு ஏக்கர்ல பாசிப்பயறு, உளுந்து மூலமா ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 258 ரூபாய் லாபமா நின்னது” என்றார்.

பாசிப்பயறுக்கு இரண்டு முறை பஞ்சகவ்யா... உளுந்துக்கு மூன்று முறை பஞ்சகவ்யா!

பாசிப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் முறை குறித்து பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே... 

பாசிப்பயறு!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ பாசிப்பயறு விதையை விதைக்க வேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து, கை தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 55-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 65-ம் நாளுக்கு மேல் முற்றி நெற்றாகும். 70-ம் நாளுக்கு மேல் காய்ந்த நெற்றுக்களை மட்டும் அறுவடை செய்யவேண்டும். செடியோடு பிடுங்கக் கூடாது. மீண்டும் 4 நாட்கள் கழித்து, எஞ்சிய நெற்றுக்களை அறுவடை செய்யலாம். 

உளுந்து!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ உளுந்து விதையை விதைக்கவேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுக்கவேண்டும்.

30, 45 மற்றும் 70-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 60-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 80-ம் நாளுக்கு மேல் முற்றும். 90-ம் நாளுக்கு மேல் உளுந்தை அறுவடை செய்ய வேண்டும். இதை செடியோடு பிடுங்கி நெற்றை தனியாகப் பிரிக்க வேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்!

“பாசிப்பயறு, உளுந்து இரண்டுக்குமே ஒரு ஏக்கர் நிலத்துக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைநேர்த்தி செய்து விதைக்கும்போது விதையின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, வேர்வழி நோய்கள் தடுக்கப்படுகின்றன. தேவைப்படும் பயிருக்கான 6 கிலோ விதையை ஒலைப்பெட்டி அல்லது மண்பானையில் போட்டு 30 கிராம் சூடோமோனஸைத் தூவி... அனைத்து விதைகளிலும் சூடோமோனஸ் படும்படி பெட்டியை நன்கு குலுக்க வேண்டும். பிறகு ஒரு கோணியை(சாக்கு) தரையில் விரித்து அதில் விதைகளைக் கொட்டி ஓர் இரவு உலர்த்த வேண்டும். விதைகளை கடைகளில் வாங்குவதை விட நாம் சாகுபடி செய்யும் செடிகளிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அடுத்தப் பட்டத்துக்கு நல்லது.

கோடை உழவும் ஆட்டுக்கிடையும்!

ஆடிப்பட்ட மானாவாரி சாகுபடிக்கு கோடை உழவு மிகவும் முக்கியமானது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் சட்டிக்கலப்பையால் ஒரு முறை உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, 4 நாட்கள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு டில்லர் மூலம் இரண்டு முறை உழுது, 20 நாட்கள் நிலத்தை காய விட்டு ஒரு முறை டில்லர் மூலம் உழவு செய்ய வேண்டும். இப்படி கோடை உழவு செய்து வைப்பதால், மண் பொலபொலப்பாக மாறிவிடும். அதனால் மழைநீர் பிடித்து வைக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். இது பெருமாளின் அனுபவப்பாடம்.

ஆடிப்பட்டம் தேடி விதை!

“ஆடி மாதம்  முதல் மழை பெய்தவுடன்  விதைத்து விடக்கூடாது. முதல் மழையின்போது, பூமியின் வெப்பம் வெளியேறும். அதனால் விதைகள் சரியாக முளைக்காது. இரண்டாவது மழை கிடைத்ததும், டில்லரால்  ஒரு முறை உழவு செய்து விட்டு விதையை நிலத்தில் ஊன்றி விதைக்க வேண்டும். தூவி விதைக்கக் கூடாது. தூவி விதைத்தால், இடைவெளி சீராக இருக்காது” என்கிறார், பெருமாள்.

Wednesday, August 10, 2016

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...

நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்... இ. கார்த்திகேயன் படங்கள்: பா. காளிமுத்து, ஆர்.எம். முத்துராஜ்
பண்ணை
விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலொட்டி கிராமத்திலிருக்கிறது தண்டபாணிக்குச் சொந்தமான 'சுமதி பழத்தோட்டம்’. நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில் ஆட்டுக்கு அகத்திக் கீரையைப் பறித்து கொடுத்துக் கொண்டிருந்தவர், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''பி.காம் வரைக்கும் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட எங்களுக்குச் சொந்தமான காய்கறிக் கடையில வியாபாரத்தைப் பார்க்க வந்துட்டேன். பரம்பரையாவே காய்கறிக் கடைதான்கிறதால, மிச்சமாகிற காய்கறி, பழங்களை எல்லாம் வீட்டுல வளர்க்கிற ஆடு, மாடுங்களுக்குப் போடுவோம். சின்னவயசுல இருந்தே கோழி, ஆடு, மாடுங்கனா ரொம்ப இஷ்டம். அதுங்கள வளர்க்கறதுல நிறைய ஈடுபாடு காட்டுவேன். இந்த ஆர்வம்தான், இப்ப இந்த 5 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வளர்க்கவும் வெச்சிருக்கு'' என்று பெருமையோடு சொன்ன தண்டபாணி, தொடர்ந்தார்.
''இந்த நிலத்துல மூணடிக்கு கீழ சுக்காம் பாறை. அதனால, 'வேற எந்தப் பயிரும் போட முடியாது’னு சொல்லிட்டாங்க. கருவேல மரங்களும், மஞ்சனத்தி மரங்களும் சூழ்ந்து கிடந்த இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, கல், மண்ணையெல்லாம் நிரவி, 2004-ம் வருஷத்துல ஒரு ஏக்கர் அளவுல காஞ்சன் ரக நெல்லி, ஒண்ணரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரக கொய்யா போட்டேன். 2007-ம் வருஷத்திலிருந்து கோழிப் பண்ணை இருக்கு. ஒன்பது மாசத்துக்கு முன்ன 1 ஏக்கர்ல ரெட் லேடி ரக பப்பாளி நடவு செய்தேன்.
விருதுநகர்ல, 2013-ம் வருஷம் டிசம்பர் மாசம், 'பசுமை விகடன்’ நடத்தின வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்பத்தான் ஆட்டுப் பண்ணை அமைக்கணும்கிற எண்ணம் வந்துச்சு. என்னோட நண்பர் பாலமுருகன் கோயமுத்தூர்ல ஆட்டுப் பண்ணை வெச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படியும், 'அம்மன் ஆட்டுப் பண்ணை' சதாசிவத்தோட வழிகாட்டுதல்படியும் ஆட்டுப் பண்ணை¬யை அமைச்சுட்டேன். 6 மாசமா ஆட்டுப் பண்ணையும் நடந்துட்டிருக்கு'' என்றபடியே நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி பற்றியும்... ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புப் பற்றியும் அழகாக அடுக்கத் தொடங்கினார். அதை, இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளில் மகசூல்!
'நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளியை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். இதற்கு, புரட்டாசியில் ஓர் உழவு போட்டு, 18 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். பப்பாளிக்கு 8 அடி இடைவெளியில் குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு தட்டுக்கூடை அளவு செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு தட்டுக்கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்யவும் சரியாக இருக்கும்.
1 ஏக்கரில் 125 நெல்லி, ஒன்றரை ஏக்கரில் 170 சப்போட்டா, ஒரு ஏக்கரில் 125 கொய்யா, ஒரு ஏக்கரில் 1,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும் (இவர், கொய்யா, பப்பாளி இரண்டுக்கும் வாரம் ஒரு முறையும்; சப்போட்டாவுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும்; நெல்லிக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்). மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைத் தட்டுக்கூடை என்கிற அளவில், ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரத்தை இட வேண்டும்
(இவரிடம் ஆடு, கோழிக் கழிவுகள் தாராளமாக இருப்பதால், அவற்றை குழியில் சேகரித்து தண்ணீரில் கரைத்து பாசன நீரில் கலந்து விடுகிறார்). முழு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நெல்லி, சப்போட்டா மற்றும் கொய்யா ஆகியவை இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். பப்பாளி ஒன்பது மாதங்களில் மகசூலுக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் வரை வருமானம் தரும்..
கோழிகளில் கொட்டும் வருமானம்!
கோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து... நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்... தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.
அசத்தும் ஆட்டுப் பண்ணை!
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது... பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது.
ஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.
தினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது.
முயல் பத்தி சொல்லலையா?!
சாகுபடி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி தண்டபாணி பேசி முடிக்க... ''முயல், புறா, மாடு பத்தியெல்லாம் சொல்லலையா..?'' என்று கேட்ட அவருடைய மனைவி சுமதி,
''ஒரு வருஷமா முயல் வளர்க்கிறோம். ஒரு ஜோடி முயல் 300 ரூபாயிலிருந்து விலை போகும். தனித்தனி கூண்டு வெச்சு, காலிஃபிளவர் இலை, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் இதையெல்லாம் உணவா கொடுக்கிறோம். நூத்துக்கணக்குல முயல்களை வளர்த்து வித்துட்டே இருக்கோம். இபபோதைக்கு 12 முயலுங்க இருக்கு. 80 புறாக்கள் இருக்கு. ஜோடி 160 ரூபாய் வரை விலை போகுது. ரெண்டு சிந்தி பசு வாங்கி ஒரு மாசம் ஆகுது. அடுத்ததா மாட்டுப் பண்ணை, லவ்பேர்ட்ஸ், நாய்ப் பண்ணைனு கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னார் சுமதி.
பழ மரம்... தரும் பலன்!
நிறைவாகப் பேசிய தண்டபாணி, ''இந்த மண் அத்தனை வளமில்லாத மண்ணா இருந்தாலும், நெல்லியைத் தவிர மத்ததெல்லாம் நல்லாவே வளர்ந்து வருது. நெல்லியில அந்த அளவுக்கு மகசூல் வரல. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை, அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு பறிப்பு. மூணு மாதம் வரை மகசூல் இருக்கும். சராசரியா தினமும் 40 கிலோ வீதம் மாசத்துக்கு 1,200 கிலோ. மூணு மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். கிலோ 25 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய்; கொய்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை பறிப்பு வரும். தினமும் 100 கிலோ வீதம், மாசத்துக்கு 3 ஆயிரம் கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால, 9 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 30 ரூபாய் வீதம், 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்; சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. தினமும் 90 கிலோ வீதம் மாசத்துக்கு 2 ஆயிரத்து 700 கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால 8 ஆயிரத்து 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் வீதம் 1 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய்; பப்பாளி தினமும் 120 கிலோ வீதம் மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா... 10 ஆயிரத்து 800 கிலோ. ஒரு கிலோ 25 ரூபாய் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் 7 லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய். இதை வருஷத்துக்கு கணக்குப் போட்டா... 15 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் வரும். செலவைப் பொறுத்தவரை 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் வரும். இதைக் கழிச்சா... 13 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.
எனக்கு விருதுநகர் மார்க்கெட்ல கடை இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. இயற்கைப் பழங்கள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்குறதால ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டு போயிடுறாங்க. அதில்லாம, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் மார்க்கெட்ல கடைகள் இருக்கு. அதனால அன்னன்னிக்கு பறிக்கிறது, அன்னன்னிக்கே வித்து தீந்துடுது. இருப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. புத்தம்புது இயற்கை பழங்கள்ன்றதால விற்பனை சுலபமாயிடுது'' என்று பழ மரங்களின் வருவாய் பேசியவர், கால்நடைகளின் வருவாய் பக்கம் வந்தார்.
''கிரிராஜா கோழி 150 இருக்கு. இது மொத்தமுமே முட்டைக்காக மட்டும்தான் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள்ல பெரிய பெட்டைகள் 100 தவிர, மீதியிருக்கிற 150 மட்டும் வளரவளர விற்பனை செஞ்சுடுவேன். தை முதல் பங்குனி வரைக்கும் 3 மாசத்துக்கு கிடைக்கிற முட்டைகளை விற்பனை செய்யுறது கிடையாது. இந்த மாசத்துல அடைக்கு வைப்போம். ஒரு நாட்டுக்கோழி 8 முதல் 10 முட்டை வைக்கும். 100 கோழிக்கு 1,000 முட்டை. இதுல 700 முதல் 750 குஞ்சுகள் வரை பொறிக்கும். 500 முதல் 600 குஞ்சுகள் பெரிய கோழியா வளரும். எப்படியும் மொத்தம் 500 கோழிகள் விற்பனையாகிடும். கோழி ஒண்ணுக்கு 400 ரூபாய் வீதம், 500 கோழிக்கு வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வரும். கிரிராஜா, நாட்டுக் கோழிகள் மொத்தமா சேர்த்து 400 கோழிகள் இருக்கு. இதன் மூலமா சராசரியா தினமும் 120 முட்டை கிடைச்சுடும். மாசம் 3,600 முட்டை. ஒரு முட்டை பத்து ரூபாய் வீதம் விலை போகுது. இதன்படி பார்த்தா.. 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி ஒன்பது மாசத்துக்கு முட்டை விற்பனை மூலமாவே 3 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முட்டைகளையும் என்னோட கடையில வெச்சே வித்துடறேன்.
கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, மொத்த கோழிகளுக்கும் ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும். 365 நாட்களுக்கு 54,750 ரூபாய் செலவு பிடிக்கும். கோழி விற்பனை, முட்டை விற்பனை மூலமா 5 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையைக் கழிச்சா. 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 250 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, பழ மரங்கள், கோழி வளர்ப்பு மூலமாவே 18 லட்சத்துக்கு மேல லாபம் கிடைக்கும். முயல், புறா வருமானமெல்லாம் தனி. பழங்கள், கோழி, முட்டைனு எல்லாத்தையும் நான் நேரடியா விக்கிறதாலதான் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியுது. இல்லாட்டி இதுல பாதி அளவு ரூபாய்க்குகூட விற்பனை செய்ய முடியாது. அந்த வகையில எனக்குக் கடை இருக்கிறது ஒரு வரப்பிரசாதம்.
வாத்து மற்றும் கின்னிக்கோழிகளை இதுவரை விற்பனை செய்யல. அதேமாதிரி ஆடுகளையும் இன்னமும் விற்பனை செய்ய ஆரம்பிக்கல. கிடைக்கிற குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நாட்டு ஆடு உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்க்கும், ஜமுனாபாரி கிலோ 350 ரூபாய்க்கும், தலைச்சேரி கிலோ 300 ரூபாய்க்கும் விலை போயிட்டிருக்கு. செம்மறி ஆடுகளை உருப்படிக் கணக்குலதான் வாங்குவாங்க. இன்னும் ஆறு மாசத்துல ஆடுகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவேன். எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக ஆடுகள் மூலம் மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்ற தண்டபாணி,
''இப்பவெல்லாம் கடும் வறட்சி ஆட்டிப்படைக்குது. 500 அடிக்கு மேல போர் போட்டாகூட தண்ணி வரமாட்டேங்குது. இதனால காய்கறி, பூ இதையெல்லாம் சாகுபடி செய்றது சாத்தியமில்லாம இருக்கு. இதுங்கள காட்டிலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புல காசு கொட்டுது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு செய்தா... லாபம் நிச்சயம்'' என்று நம்பிக்கைப் பகிர்ந்தார்.
தொடர்புக்கு,
தண்டபாணி,
செல்போன்: 93674-11815

Thuvarai cultivation . Thoor Dhaal . துவரை விவசாயம் நாற்று நடவு முறை

http://www.vikatan.com/pasumaivikatan/2012-aug-10/current-affairs/21992.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

கோ.ஆர்.ஜி.-7’ என்ற ரகத்தை வேளாண்துறை பரிந்துரை செய்வதால், குறுகிய காலத்தில் மகசூல் கிடைக்கும்

தென்னைநார்க் கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் துவரையை விதைத்து, சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்து வந்தால், நாற்று முளைக்கத் தொடங்கும். குழித்தட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ஷீட்களிலும் தென்னைநார்க் கழிவைக் கொட்டி நாற்று உற்பத்தி செய்யலாம். குழித்தட்டு நாற்றுகளை 15 நாட்களில் நடவு செய்துவிட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டில் வளர்ந்த நாற்றுகளை 25 நாட்கள் வரை வைத்திருந்து நடலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது. வழக்கமான விதைப்பு முறையில் ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை விதை தேவைப்படும். மானாவாரி விவசாயிகள் நாற்றாங்கால் உற்பத்தியை ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம். ஆகஸ்ட் மாதம் 2-ம் வாரம் விதை போட்டால்... செப்டம்பர் முதல் வாரம் நடவுப்பணியைத் தொடங்கலாம். அப்போது மழைக்காலம் என்பதால் நிலத்தில் உள்ள ஈரத்திலேயே நடவு செய்து விடலாம்.
பாத்தியின் ஓரத்தில் நடவு!
நாற்று உற்பத்தி தொடங்கும்போதே, வயல் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கிவிட வேண்டும். தொழுவுரம் இட்டு நிலத்தை இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 கொக்கிகள் உள்ள கலப்பையில் நடுவில் உள்ள மூன்று கொக்கிகளையும் கழற்றி விட்டு ஓட்டினால்,
5 அடி இடைவெளியில் பார் மாதிரியான கரைகள் உருவாகிவிடும். பாரின் ஒரு பக்கத்தில் 3 அடி இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்ய வேண்டும். இப்படி பாரின் ஒரு ஓரத்தில் மட்டும் நடவு செய்வதால், பள்ளத்தில் தேங்கும் மழைநீரே, நாற்று வளர போதுமானதாக இருக்கும்.
நோய் தாக்காது!
நடவு செய்த 25-ம் நாள் களை எடுத்து, மண் அணைக்க வேண்டும். அப்போது செடியின் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகக் கிளைகள் உருவாகும். இதைத் தவிர வேறு பராமரிப்பு தேவைப்படாது. துவரையில் எந்த நோயும் தாக்குவதில்லை. சில நேரங்களில் பூச்சித்தாக்குதல் இருக்கலாம். 250 மில்லி என்.பி. வைரஸ் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாகத் தெளித்து, உயிரியல் முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை கிடைக்கும். அதைக் கொண்டே செடிகள் செழிப்பாக வளர்ந்து விடும்.
பூக்கும் நேரத்தில் மழை முடிந்து விடுவதால், இயற்கையாகவே நல்ல சூழல் கிடைத்து விடும். பிறகு இயற்கையாகவே கிடைக்கும் பனி மற்றும் நிலத்தில் உள்ள ஈரப்பதம் ஆகியவையே அறுவடை வரை செடிகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
இரண்டு மடங்கு மகசூல்!
வழக்கமாக விதைக்கும் துவரையின் தண்டு அதிக பருமனாக இருக்கும் என்பதால், அறுவடையின்போது, அதை வெட்டிதான் எடுப்பார்கள். ஆனால், 'கோ.ஆர்.ஜி-7’ ரகத்தில் அந்த கஷ்டம் இருக்காது. இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். அதோடு, இந்த ரகம் அதிக உயரம் போகாமல் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.
அறுவடை செய்த துவரையைக் காய வைத்து, தட்டி காயைப் பிரித்துக் கொள்ளலாம். விதைப்பு முறையில் விதைப்பது எல்லாம் முளைத்து விடாது, அதேபோல பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியாது.
அதனால் மகசூல் குறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், நாற்று நடவு முறையில் இந்த விஷயங்கள் பராமரிக்கப்படுவதால், அதிக மகசூல் கிடைக்கும். நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு சராசரியாக 750 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். வழக்கமான துவரையில் அதிகபட்சமே 400 கிலோ மகசூல்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இறவை முறையில் சாகுபடி செய்யும்போது நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு ஆயிரத்து ஐநூறு கிலோ வரை கூட மகசூல் எடுக்க முடியும்'' என்ற ரவிபாரதி நிறைவாக,

தொடர்புக்கு,
ரவிபாரதி,
செல்போன்: 94425-42894

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வேளாண் உதவி இயக்குநர் 

http://www.vikatan.com/pasumaivikatan/2013-feb-25/yield/29460.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2