Monday, November 30, 2015

Tuesday, November 3, 2015

முயல், எலி, பெருச்சாளி தொல்லை

இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.

Monday, September 21, 2015

Thursday, September 3, 2015

Hen to de-weed and improve soil quaity . Permaculture

Nice link about how hen is used in farming.
http://permaculturenews.org/2014/11/11/chicken-systems-of-zaytuna-farm/

Friday, August 21, 2015

Monday, August 17, 2015

Groundnut post harvest managment methods


How do we know the crop is mature to be harvested ?
The easiest and most practical method to look for pod maturity is internal pericarp color.
Darkening of the internal surface of the pericarp is directly related to seed maturity (Fig 11). When
75–80% pods show internal pericarp darkening, it means the crop is at optimum maturity. 

What will be the moisture content on harvest ?

At harvesting, groundnut pods generally contain about 35% moisture, which must
be brought below 7% to provide optimal conditions in storage. The harvested
plants are well shaken to dislodge the soil from pods and are left in the fi eld
for 2–3 days for initial drying before stripping. In the postrainy season, when
higher temperatures (40-45°C) prevail at the time of harvesting, the pods must
be stripped immediately and dried under shade.

How to store groundnut for longer periods ?
Eco-friendly management of storage pests at farm and household level:
At farm level, groundnut is often stored as pods, and it may not be possible for
the smallholder farmers to provide high quality storage conditions. The pods
should be stored in polythene lined gunny bags or in some other safe storage
structures (small seed bins, earthen pots or metal drums) in a well-ventilated
and rodent free room. Only undamaged, well-dried clean pods should be stored
to avoid fungal and insect pests’ attack in the storage.
•   After 2–3 days of drying in the fi eld, when high temperatures (40-45°C)
prevail at the time of harvest, the pods must be stripped immediately and
dried under shade to maintain seed viability for a longer period.
•   Maintenance of optimum moisture content (below 7%) of seed, sanitation of
seed as well as storage space, and appropriate storage methods are always
critical in preventing the development and damage caused by storage pests.
In rural household situations where measuring moisture content is difficult.
see that the testa of the seed comes away with gentle pressure applied to the
seed between thumb and forefinger after thorough drying.
•  Clean the storage containers thoroughly and expose them to sunlight for a
couple of days before storing groundnuts.
•   In case of C. serratus, to prevent primary infestation from alternate hosts
(Tamarind, Acacia and Pongamia) avoid drying groundnuts near these host
trees.
•   In Vietnam, well dried pods are stored in earthen pots of 20-25 kg capacity
lined with dried banana leaves. The top of the container is fi lled with a
thin layer (one cm depth) of rice and then sealed with mud. This facilitates
effective storage against insect pests without affecting the viability.
•  Storing groundnut kernel with dried neem leaves (about 500 g of leaves for
10 kg kernel) in any sealed container can be effective.

Ref : http://oar.icrisat.org/215/1/591_09_IB84_PostharvestInsectPestsofGroundnut.pdf

Ref : http://www.n2africa.org/sites/n2africa.org/files/images/Post%20Harvest%20Handling%20Manual%20Zimbabwe%20%2831Oct%202013%29.pdf

Sunday, July 19, 2015

Native variety seed banks contacts in Tamilnadu . விதைகளை காத்துவருவர்பவர்கள்

விதைகளை காத்துவருவர்பவர்களையும் விவசாயிகளையும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது மட்டுமே வானகத்தின் நோக்கம். இந்த விதைகள் வாழ்வியலுக்காக பயன்படுத்தவும். வியாபரத்திற்காக அல்ல. எனவே விதைகளின் தரம் விதைகளை வாங்குபவர்கள் , பெறுபவர்கள் பொறுப்பு. நிர்வாகம் பொறுப்பல்ல.
1. வானகம் விதை வங்கி,
கடவூர், கரூர். தொடர்புக்கு : செந்தில் 8489750624
காட்டுக்கம்பு, இருங்கு சோளம், காடைக்கன்னி, கொள்ளு மற்றும் பல சிறுதானிய விதைகள் போன்ற பல விதைகளை பரிமாற்றம் செய்ய சேவை விதைகள் மட்டுமே அளிக்கப்படும்.
நேரில் வந்து மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்.
2. பாண்டியன் , விழுப்புரம், காய்கறி & கீரை விதைகள் .
தொடர்பு எண் : 7811897510
3. உசேன், தேனி. அன்னாஞ்சி தக்காளி எண் : 9751221716
4. மருதையப்பன், கடவூர் , கரூர்.
சிறுதானிய விதைகள் எண் : 9489174665
5. தேன்கனி உழவர் வார சந்தையின் இயற்கை விவசாயிகள்,
விருது நகர் மாவட்டம்.
** ஜெயமணி, சிவகாசி. எண் : 99529 65181
காட்டுக்கம்பு, குதிரைவாலி, திணை , எள்
** கா. கருணாகரன், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
எண் : 90472 73009
பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, பூங்கார், கருத்தகார், சேலம் சன்னா, சீரகசம்பா, கருங்குறுவை, வெள்ளைப் பொன்னி, நாட்டுத்துவரை ( மரத்துவரை ), அறுபதாம் குறுவை, கருப்புக் கவுணி,
** கணேஷ் குமார் : கோவில்பட்டி .
கருங்கன்னி நாட்டு பருத்தி எண் : 8098851621
6. ராஜ வேந்தன், திருவண்ணாமலை, காட்டுயானம் நெல்
எண் : 9840151012
7. சரோஜா, பள்ளபட்டி, கரூர், எண் : 94894 34551
ஆமணக்கு, தட்டைப் பயறு, கொள்ளு,
8. கீரை விதைகள் ,
உயர்திரு. மா.ராமசாமி, திருவண்ணாமலை. எண் : 04175 226742
9. காந்தி கடலை ( நிலக்கடலை )
திருக்குறள் விவசாயப் பண்ணை, வேலூர் மாவட்டம்.
கைபேசி : 98941 43061
10. பரமேஸ்வரன் , ஒட்டன்சத்திரம் ,
காய்கறி & கீரைகள் எண் : 8973982739
11. ரோஸ் தொண்டு நிறுவனம், புதுக்கோட்டை
சிறுதானியங்கள் . எண் : 9842093143
12. ராஜேஷ், நாகப்பட்டினம், பாரம்பரிய நெல் விதைகள்
எண் : 8608193966
13. ரமேஷ், தெற்கு காட்டூர், ராம நாதபுரம்,
பூங்கார் நெல், எண் : 9443861558
14. கிருஷ்ணன், இராம நாதபுரம், சண்டிகார் நெல் : 887072155
15. அங்கம்மாள், பனம்பட்டி, புதுக்கோட்டை .
ஆலவயல் கத்தரி : 960030737
16. ரகுபதி, வேலூர்.
வெங்காயம், கருணைக்கிழங்கு, ஆலவயல் கத்தரி, பாசிப்பய்று , பூ வகை : 9843772130
17. சிவா, ராமநாதபுரம்
சுரை, நீள புடலை , நீள பாகல், நீள பீர்க்கன், சுரை, பாலையூர் கத்தரி, : 9489274427
18. இராஜமாணிக்கம் , இராம நாதபுரம்.
பாண்டியூர் கத்தரி . எண் : 9629942364
19. நடராஜன் , இராம நாதபுரம்.
நாட்டு கத்தரி வகைகள் எண் : 9629947364
20. எழில் நடராஜன் . சின்ன சேலம்
கருப்புக்கவுணி, மாப்பிள்ளை சம்பா எண் : 9443236851
21. சீனு பரமேசுவரன் , புதுச்சேரி.
ஆழ்வார் குறுவை. எண் : 9360214387
22. க. திணேஷ் பாபு, தலைவாசல் .
கந்தசாலா, நவரா , பாரம்பரிய நெல் எண் : 9489144845
23. கேசவன், மதுரை. எண் : 9940965170
பாசிப்பயறு, காய்கறி விதைகள்
24. சந்திரசேகர், திருப்பூர் . எண் : 9994566624
சிகப்பு வெண்டை, காடைக்கன்னி சிறுதானியம்
இது போல நீங்களோ அல்லது உங்கள் பகுதியிலும் யாரவது பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வருவார்களே யெனில் உங்கள் தகவலை இங்கு பகிரலாம். Karuppasamy2k09@gmail.com என்கிற மின்ன்ஞ்சலுக்கு தமிழில் தகவல் அனுப்பலாம்.

Wednesday, July 15, 2015

மழை நீர் சேகரித்து காடு வளர்ப்பவர்.

தமிழில் தி இந்து நாளிதழில் வந்த செய்தி.
 
Sathasivam 9843014073

தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி
‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.
இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.
புதுமை நீர்ப் பாய்ச்சல்
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.
இந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக்கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.
இப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, மனித குலத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கும் சதாசிவம், இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:
மழை இறங்கா மண்
“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.
இது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.
இந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.
15 ஆண்டு கால முயற்சி
ஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
தோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முறை மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்!” என்கிறார்.
செலவில்லை
இந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” - எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார்
இ.ஆர்.ஆர்.சதாசிவம்.

சதாசிவம், தொடர்புக்கு: 9843014073

நன்றி - தமிழில் தி இந்து

Tuesday, July 14, 2015

வாழை விவசாயம் குறித்த தகவல்கள்

               
 வாழை விவசாயம் குறித்த தகவல்களின் தொகுப்பு .

திசு வாழை நடவு முறை :
சணப்பின் நிழலில் வாழை!
வாழை நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே நுண்ணுரக் கலவை தயார் செய்ய வேண்டும். 250 கிலோ தென்னைநார் கழிவோடு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றில் தலா ஒரு கிலோ அளவுக்கு கலந்து, நிழலில் வைத்து, லேசான ஈரப்பதம் இருக்குமாறு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
அதேபோல, தேர்வு செய்திருக்கும் நிலத்தையும் முன்கூட்டியே உழுது, சணப்பு விதைகளைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (8 சென்ட் நிலத்துக்கு, 3 கிலோ சணப்பு தேவை). 20 நாட்களில் சணப்பு இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் நிழலில்தான் வாழையை நடவு செய்ய வேண்டும்.
9 அடி இடைவெளி!
வரிசைக்கு வரிசை, மரத்துக்கு மரம் ஒன்பது அடி இடைவெளி இருக்குமாறு ஒரு கன அடி அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் நுண்ணுரக் கலவையை தலா 5 கிலோ வீதம் இட்டு, உதயம் வாழைக் கன்றை நடவு செய்து, மண்ணை நிரப்ப வேண்டும். கையால் மண்ணை அழுத்தக்கூடாது. நடவு செய்தவுடன் பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நடவு செய்த 15-ம் நாள், தரையிலிருந்து ஓர் அடி உயரம் விட்டு, சணப்பை அறுத்து, வாழைக் கன்றுகளைச் சுற்றிப் பரப்ப வேண்டும். 20 நாட்கள் கழித்து, பவர் டில்லர் மூலமாக சணப்பு முழுவதையும் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

 கூன் வண்டு கட்டுப்பாடு :

        நடவு செய்து ஆறாவது மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம் வரை தண்டு மற்றும் கிழங்கு கூன் வண்டுகளின் தாக்குதல் இருக்கலாம். இவற்றை, இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தி விடலாம். அதாவது, பக்கத்து தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழை மரங்களில் சாறு அதிகமுள்ள மரங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றரையடி துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பசைத் தன்மையுள்ள இயற்கைப் பூஞ்சணத்தை உள்புறமாக தடவி, மீண்டும் ஒட்டியநிலையில் தோப்புக்குள் ஆங்காங்கு போட்டு வைத்தால்... அவற்றால் ஈர்க்கப்பட்டு, குடைந்துகொண்டு உள்ளே செல்லும் வண்டுகள், அதில் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.
ஒரு ஏக்கருக்கு 40 இடங்களில் இப்படி பொறி வைக்க வேண்டும். பொறிக்காக வைக்கும் மரம் காய்ந்துவிட்டால், புதிய மரத்தை வைக்க வேண்டும்

Irrigation :
http://agritech.tnau.ac.in/expert_system/banana/irrigationmanagement.html

Tuesday, June 23, 2015

In this post I'm trying to consolidate a list of organic farmers in Tamilnadu



               Reference from different articles in magazines and from people I know i'm trying to consolidate a list of organic farmers and their contact information . I will continue to update this page when ever i get a new information.

Rice 


Mr. R. Jayaraman at Kattimedu, Adhirangam, Thiruthuraipoondi, Tiruvarur District, Mobile: 094433 20954. Tamil Nadu.  Organic rice production and knowledge about varieties . He organizes every year a traditional paddy seed festival .He maintains records and registers of farmers who benefit ted from the seed festival. The State Government conferred the best 'Organic farmer award' on him.
(See article about this farmer http://www.thehindu.com/sci-tech/agriculture/school-dropout-helps-preserve-traditional-paddy-seeds/article3775854.ece)


Articles about Organic rice growing :
http://www.thehindu.com/seta/2004/07/08/stories/2004070800431500.htm


Fruits 

Nurseries for fruit saplings address :

http://www.plantscarenursery.com/contact.html

Govt nursery :

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/sundaramudaiyan-model-farm-to-produce-87-lakh-saplings-this-year/article5066669.ece

------------------------------

  http://agritech.tnau.ac.in/farm_innovations/pdf/Farmers%20Innovation%20in%20Horticulture1.pdf

  There is a subsidy from Horticulture department . Need to approach the Assistant director of horticulture or
E Extension Center ,Directorate of Extension Education , TNAU , Coimbatore


Mango

Ultra high density farming 

https://www.youtube.com/watch?v=ZSXsF5tgvlw
http://farmnest.com/forum/agricultural-crops/high-density-mango-plantation/
http://www.anushafarms.com/blog/
  In advanced countries, mango yields up to 10 - 12 tons per acre. This is possible by selecting the best yielding varieties and by adopting good cultivation practices.

At present high density planting and ultra high density planting methods are gaining momentum to utilize the land effectively and get maximum production in short duration.

We have good variety mango grafts for sale - Reliance Jumbo Kesar Mango.
Salient features of Reliance Jumbo Kesar Mango:
• Yield of 10 - 12 Tons per acre.
• Good table fruit with less fibre, sweet taste and nice kesar colour.
• Bigger Fruit size - 300 to 400 gm average weight per fruit.
• Ideal for exports due to longer shelf life.
• Good for pulp due higher pulp nut ratio.
• Great demand for Kesar pulp in the export market.
• Best suited for high density planting and mechanization of farm operations.
• Yield starts from third year onwards.

Reliance Jumbo Kesar Mango Grafts are available for sale in our farms at Andrapradesh, Tamilnadu, Maharashtra & Gujarat.

Please contact,

G. Ananthan
09000228803
ananthan.gopal@ril.com

----

http://www.jains.com/Company/News/JISL%20has%20developed%20hi-tech%20cultivation%20methods%20for%20Mangos.htm

  --------------------------------------------------------------------------------------------------

Mosambi

திருவண்ணாமலை மாவட்டம், நார்த்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன். சாத்துக்குடி . தொடர்புக்கு, கமலநாதன், செல்போன்: 98945-36616
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=24925&utm_source=facebook&utm_medium=PasumaiVikatan&utm_campaign=10%09http://www.vikatan.com/new/article.php?

--------------------------------- 

Jamoon

Mr. C. Jayakumar a jamun grower from Dindugal 
Mr. C. Jayakumar, Nilakottai Taluk, Mettur gate post, Kodai road, Mobile : 09865925193, email : jkbiofarmdgl@gmail.com and Mr. Madhu Balan on email : balmadhu@gmail.com, mobile: 09751506521,
http://www.thehindu.com/sci-tech/a-short-variety-jamun-cultivation-fetches-good-rewards/article6104923.ece
He is sourcing from some nursery in Rajahmundry Andhra
http://svsnursery.com/contactus.html (one of the nursery in Rajahmundry selling jamun plant)

  ---------------------------------

Pomegranate

இயற்கை முறை மாதுளை சாகுபடி!
Bhagva variety
கூடலூர்-குமுளி தேசிய நெஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சைநிற நிழல் வலை சுற்றப்பட்ட 'ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99614
குரியன் ஜோஸ்,
செல்போன்: 093886-10249,
ஜான் தாமஸ் (மேலாளர்),
செல்போன்: 95780-72722
Pomegranate (Bhagva & Arakta) :
http://www.agricultureinformation.com/forums/sale/124078-pomegranate-bhagva-arakta-varieties.html
 http://agriexchange.apeda.gov.in/Market%20Profile/MOA/Product/Pomegranate.pdf

----------------------------------------

Guava

Allahabad safeed, Lucknow-49
http://nhb.gov.in/report_files/guava/GUAVA.htm
http://www.keralaagriculture.gov.in/htmle/bankableagriprojects/ph/guava.htm
High density 
https://www.youtube.com/watch?v=xFsBY49Vpzc 
2.5 X 2.5 = 600 plants
Need to translate this https://www.youtube.com/watch?v=_hrL_WH8b98
In english , some tech details and contact for further info.
https://www.youtube.com/watch?v=rvghnP-iw1E

  ---------------

வாழைச் சாகுபடி

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=103444&utm_source=facebook&utm_medium=PasumaiVikatan&utm_campaign=10

---------------- 

 Pappaya (Zero budget multi crop model)

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=3499&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1


சிவா, அலைபேசி: 98942-40000

 

---------------- 

Vegetables

Polyhouse, cucumber : Sulur
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35687
மோகன் செல்லக்குமார்,
செல்போன்: 96884-89477

கத்தரி

இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!
 http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102012
Succesful brinjal farmer.
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=105764&utm_source=facebook&utm_medium=PasumaiVikatan&utm_campaign=10

வரிப்புடலை

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96677
தொடர்புக்கு,
எம்.எஸ். செல்வராஜ்,
செல்போன்: 99655-99969


1 ஏக்கர், 150 நாள், ரூ.1 லட்சம்
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=111765

தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 9486588859

 பீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்

  http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96651
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71234&utm_source=facebook&utm_medium=PasumaiVikatan&utm_campaign=10
தொடர்புக்கு,
கேத்தனூர் பழனிச்சாமி,
செல்போன்: 99439-79791 


Chilli 
Common leaf roll disease which is caused by virus. 
1) spray 10 ltr jivamrut + 500ml sour butter milk ( butter milk to be added while spraying not on preparing jivamrut ) in 100 ltr of water. Took 3-4 spray every 8 days
2) after 4 days of above spray tak
e 8 ltr dashpatr ark + 2 ltr cow urine mix it with 100 ltr water then spray. Took 2 sprays in 8 days duration.
3) keep mulching trap crops like marigold,maize, cowpea in inter cropping.
4) keep wapsa condition on soil.
5) pour & spray jivamrut on regular basis.
It is a viral infection Agniastr will not work.
 


Murngai

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=110210&sid=3357&mid=8


ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வருமானம்...வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை!

தென் மாநிலத்தவர்கள் உண்ணும் காய்கறிகளின் பட்டியலில் முருங்கைக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்... என முருங்கைக்காயைக் கொண்டு பலவித உணவுகள் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கைக்காய் இல்லாத சைவ விருந்தே கிடையாது என்றுகூட சொல்லலாம். இப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம்... அது தன்னுள் கொண்டுள்ள ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்களே!
முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கும் என்பதால், பாசன வசதி குறைவான விவசாயிகளுக்கு உகந்த பயிராகவும் இருக்கிறது. அதனால்தான் காய்கறி விவசாயிகள் பலரும் முருங்கையை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி.
தண்ணீர் குறைந்ததால் முருங்கை!
காய் பறிப்பில் மும்முரமாக இருந்த சடையாண்டியைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘எங்க பூர்வீகமே இந்த ஊருதான். எங்க தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். எனக்கு படிப்பு வரலை. அதனால சின்னவயசுலயே அப்பா கூட விவசாயத்துல இறங்கிட்டேன். எங்களுக்கு பதினைஞ்சு ஏக்கர் நிலம் இருக்குது. வாழை, கரும்புனு செழும்பா விவசாயம் நடந்துக்கிட்டு இருந்த இடம்தான். அப்பறம் கிணத்துல தண்ணி குறைஞ்சுப் போனதால, குறைவான தண்ணியிலேயே வர்ற நாட்டு முருங்கையைப் போடலாம்னு முடிவு பண்ணினேன்.
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன, இந்தப் பக்கம் அவ்வளவா முருங்கை சாகுபடி இருக்காது. செடிமுருங்கையும் அப்ப பிரபலம் ஆகல. நாட்டுமுருங்கையைத்தான் பெரும்பாலும் சாகுபடி செய்வாங்க. தென்மாவட்டங்கள்ல முருங்கைக்குப் பேர் போனது, வளையப்பட்டிதான். அங்க இருந்துதான் விதைக்குச்சி வாங்கிட்டு வந்து நட்டேன். அந்த மரங்கதான் பதினஞ்சு வருஷமா மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு” என்று முன்கதை சொன்ன சடையாண்டி, தொடர்ந்தார்.
50 ஆண்டுகள் மகசூல்!
“இதுக்கு பெரிசா தண்ணி தேவையில்லை. நடவு செஞ்சி முறையா பராமரிச்சா ஒரு மாசத்துல வேர் பூமியில நல்லா இறங்கிடும். அதுக்குப் பிறகு, வறட்சியைத் தாங்கி வளந்திடும். முறையா கவாத்து செய்தா, கிட்டத்தட்ட 50 வருஷம் கூட மகசூல் எடுக்கலாம். நடவு செஞ்சி 6 மாசத்துல காய்ப்புக்கு வந்தாலும் ஒன்றரை வருஷத்துக்கு மேலதான் நல்ல மகசூல் கிடைக்கும். வருஷத்துக்கு மூணு போகம் காய் காய்க்கும். அதிகப் பராமரிப்பு தேவைப்படாத, செலவு வைக்காத பயிர் முருங்கைதான்.
ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். முதல் மூணு வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது. அடுத்தடுத்து பூச்சிக்கொல்லி தெளிச்சதுல, முருங்கை இலைகள், பூக்கள்லாம் கொட்டிப்போச்சு. அதனால, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். கிட்டத்தட்ட 11 வருஷமா இயற்கை விவசாயம்தான் செய்றேன். எனக்குத் தெரிஞ்ச இயற்கைத் தொழில்நுட்பங்களை மத்த விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.
விற்பனைக்கு வில்லங்கமில்லை!
முருங்கையில இலை, பட்டை, காய், விதைனு எல்லாத்தையும் விற்பனை செய்ய முடியும். எல்லாத்துலயும் மருத்துவக் குணம் இருக்கறதால தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. நான் காயாத்தான் விற்பனை செய்றேன். மொத்தம் இருக்கிற 15 ஏக்கர்ல 8 ஏக்கர்ல முருங்கை போட்டிருக்கேன். மீதி 7 ஏக்கர்ல தென்னை போட்டு அதுலயும் முருங்கை நடவு பண்ணிருக்கேன். தென்னை, முருங்கை ரெண்டுமே இளங்கன்னாத்தான் இருக்கு. எட்டு ஏக்கர் முருங்கையிலயும் இப்போதைக்கு ஒரு ஏக்கர்ல மட்டும்தான் காய் பறிச்சு விற்பனை செய்றேன். இந்த நல்ல முருங்கை ரகத்தை எல்லா விவசாயிகளும் பயிர் செய்யணும்னு, முருங்கை மரங்கள்ல இருந்து விண்பதியம் (பார்க்க, பெட்டிச் செய்தி) மூலமா முருங்கை நாத்து உற்பத்தி பண்ணி விற்பனை செய்துட்டு இருக்கேன்” என்ற சடையாண்டி, நாட்டுமுருங்கை மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.
ஒரு மரத்தில் 2 ஆயிரம் ரூபாய்!
“நடவு செய்த ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு, நல்ல பராமரிப்புல இருக்கற ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு சராசரியா 200 கிலோ அளவுக்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ காய் 10 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரை விலை போகும். முகூர்த்த நாட்கள்ல இந்த மாதிரி அதிக விலைக்கு விற்பனையாகும். பொதுவா ஜனவரி, பிப்ரவரி மாசத்துல ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும். குறைந்தபட்ச விலையா கிலோவுக்கு 10 ரூபாய்னு வெச்சுக்கிட்டாகூட 200 கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஆச்சு. அந்தக் கணக்குலயே ஒரு ஏக்கர்ல இருக்கற 160 மரங்க மூலமா, வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும்.
50 ஆயிரம் ரூபாய் செலவானாலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.
மொத்த முருங்கை மரங்கள்ல இருந்தும் வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாத்து வரைக்கும் உருவாக்க முடியும். ஆனா, அதுல 70 ஆயிரம் நாத்துதான் தேறும். ஒரு நாத்து முப்பது ரூபாய்ல இருந்து முப்பத்தஞ்சு ரூபாய் வரை விற்பனையாகும். குறைஞ்சபட்ச விலையா முப்பது ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 70 ஆயிரம் நாத்துக்கள் விற்பனை மூலமா 21 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல ஏழு லட்ச ரூபாய் செலவு போக, 14 லட்ச ரூபாய் லாபமா நிக்கும்” என்ற சடையாண்டி நிறைவாக,
“எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம, அதிகத் தண்ணி இல்லாம இவ்வளவு லாபம் எந்தப் பயிர்ல கிடைக்குது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சாமானிய விவசாயிகளோட பணப்பயிர். அதில்லாம இந்த ‘இயற்கை முருங்கை சாகுபடி’ என்னை விருது வாங்குற வரைக்கும் உயர்த்தியிருக்கு. போன வருஷம் புதுச்சேரியில நடந்த ஒரு நிகழ்ச்சியில முதலமைச்சர் ரங்கசாமி கையால விருது வாங்கினேன். இந்த வருஷம் அரியலூர்ல நடந்த ஒரு நிகழ்ச்சியில முன்னாள் ஜனாதிபதி  அமரர் அப்துல்கலாம் கையால ‘சிறந்த விவசாயி விருது’ வாங்கியிருக்கேன்’’ என்று பெருமிதத்துடன் சொல்லி விடைகொடுத்தார்
தொடர்புக்கு,
சடையாண்டி,
செல்போன்: 97913-74087.




செடிமுருங்கை... நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு!
முருங்கையில் நாட்டுமுருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
காய் விலை பற்றி கவலையே இல்லை!
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.
இலைக்கும் கிராக்கி!
முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.
விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!
சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது இப்படித்தான்-
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.

இப்படித்தான் செய்யணும், முருங்கை சாகுபடி!
சடையாண்டி முருங்கை சாகுபடி குறித்துச் சொன்ன விஷயங்களை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
‘முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும்.  ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு... நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.
120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும். இதைத்தவிர முருங்கையில் வேறு பராமரிப்பு தேவையில்லை.’’

பூச்சி, நோய் பராமரிப்பு!
முருங்கையில் பூச்சி, நோய் பற்றி சடையாண்டியின் அனுபவம்...
முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச் சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும் தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.


 

Trees 

NilaVembu

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=45994&utm_source=facebook&utm_medium=PasumaiVikatan&utm_campaign=10 

 

Medicinal plants

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=104389

. மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவர்கள் எங்களை அணுகலாம்’’ என்று அழைப்பு வைத்தார். இதற்கான செடிகள், நாற்றுகளை இலவசமாகவே வழங்குகிறோம்
தொடர்புக்கு,
திருநாராயணன்,
செல்போன்: 94440-18158

 

Wednesday, June 3, 2015

Farming innovations from farmers.

http://agritech.tnau.ac.in/farm_innovations/farm_innovations.html

Hotriculture innovation : http://agritech.tnau.ac.in/farm_innovations/pdf/Farmers%20Innovation%20in%20Horticulture1.pdf

Thursday, May 28, 2015

மண்ணில்ல பசும் தீவன வளர்ப்பு.

http://www.dinamani.com/junction/velaanmani/2015/03/18/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.../article2718092.ece

Tuesday, March 17, 2015

Friday, January 23, 2015

Different Layering technics

http://www4.schoolnet.lk/edusoft/agriculture/grade-12_13/more.php?sub=Layerings&main=main12